Saturday, March 27, 2010

எங்கள் ஈழக்குழந்தையின் குறள்


புதிதாய் பிறந்த எங்கள் ஈழக்குழந்தையின் குறள்

எங்கள் தாய் மண்ணிலேயே
இறைச்சித் துண்டாய்
மிதிபட்டுக் கிடக்கின்றோம்
இது தற்காலிகமானது தான்
கம்பிவேலிகளுக்குள் கிடக்க
நாங்கள் கற்கள் அல்ல
காந்தப்புலங்கள்!....

பார்வைக் கொள்ளைக்காரி


பார்வைக் கொள்ளைக்காரி

முட்டாள்கள்
விதவிதமான ஆயுதங்களின்
உதவியுடன் கொள்ளையடித்து
கொண்டு போகிறார்கள்
ஆனால் நீயோ,
ஒரு சிறு ஓரப் பார்வையால்
எல்லோரையும்
கொள்ளைகொண்டு விடுகிறாய்
என் பார்வைக் கொள்ளைக்காரி
இன்னும் கொஞ்சநேரம்
உன் பார்வையால் பேசிவிட்டுப்போ!.....
*********************************************************************

Friday, March 26, 2010

தேடித் தொலைகிற காலம்


தேடித் தொலைகிற காலம்

அது கல்லூரி காலம்
ஒரு நல்ல நட்பு
அன்புத் தோழி
தேர்வுக்காய்
கடைசி நொடி படிப்பு
கல்லூரி விழா -என
எல்லாவற்றையும்
தேடித் திரும்புவதற்குள்
அந்த கடைசி நாள் வந்து விடும்..
மீண்டும் தொலைத்தோம்
வெகு நாட்களுக்கு பிறகு
சந்தித்துகொள்வோம்-எனினும்
அப்போதும் கண்ணீர் மல்க
சில நினைவர்களை தேடிக்கொண்டிருப்போம்!...

Thursday, March 25, 2010

உன் பெயர்தான் புன்னகை பூவோ!.



எத்தனையோ
ஆண்டுகளுக்கு முன்னர்
பல அரிய மிருகங்கள்
பூமியில் வாழ்ந்தனவாம்!
அது எல்லாம் எனக்கு தெரியாது
சுமார் இருபத்திரண்டு ஆண்டுகளாய்
ஒரு பூ வளர்ந்து கொண்டும்
புன்னகத்துக்கொணடும்
என்னுடன் பேசிக்கொண்டும்
இருக்கிறது!....
******************************************************************

Tuesday, March 23, 2010

நீயே சொல்

நீயே சொல்
நான் என்ன செய்ய,
உன்னை மறக்க முடியாதா என்கிறேன்
முயன்று பார்க்கிறேன்
போகும் பார்க்கும்
என எல்லா இடங்களிலும்
நீயே நினைவாடுகிராய்
அது
பொட்டல் காடானாலும் சரி,
புனலுரும் பூமியானாலும் சரி,
இப்போதும் நான் என்ன செய
நீயே சொல்!...
***********************************************************
Free Backlinks