Monday, February 28, 2011

என் கனவு காக்கும் தேவதை




நான் 
சிரித்து, மகிழ்ந்த 
ஒவ்வொரு வினாடிகளும்-உன்னால் 
களவாடப்பட்ட பொழுதுகள் தான் 
களவு கொடுத்துவிட்டோம் என்ற  
ஏக்கம்  ஒரு நாளும் இருந்ததில்லை 
ஆம் -அவை அனைத்தும் 
உனக்கான நிமிடங்கள்-நீ 
என் கனவு காக்கும் தேவதை!..
**********************************************

Thursday, February 24, 2011

செல்வி நாளை திருமதி...




நான் சிறிது சிறிதாய் 
எனை இழந்து கொண்டிருகிறேன் 
உணரமுடியாத வலிகள் 
உறங்கத் துடிக்கின்ற விழிகள் 
உறங்க மறுக்கின்ற மனம் 
புழுதி படிந்து போன 
நினைவுகள் எல்லாம் 
உயிர் பெற்றுவிட்டன..
உருவற்று போன வார்த்தைகள் 
உயிர்பெற துடிக்கும் சுவாசப்பைகள்
நாளை என் இதயத்திற்கு மரணம் 
இல்லையெனில் இப்படியும் வைத்துகொள்ளலாம் 
செல்வி நாளை திருமதி....
**************************************************************************************************

Wednesday, February 23, 2011

சதை பிண்டங்களாகவே





எல்லோரும் சதை பிண்டங்களாகவே 
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் 
இதயத்தையும் உணர்வுகளையும் 
ஏதோ ஒரு வினாடியில் 
ஒரு வலியில் தொலைத்து விடுகிறோம்!..
ஆம் ரசிக்க ஒருமனம்; வெறுக்க ஒரு மனம்

Saturday, February 12, 2011

முடிந்த வரை


முடிந்த வரை 
கண்களோடு பேச 
கற்றுக் கொள்ளுங்கள் -அப்பொழுதுதான்
 உண்மையான அன்பை ஸ்பரிசிக்க முடியும் 

முடிந்த வரை 
தனிமையை 
நேசிக்க பழகுங்கள்-அப்பொழுதுதான்
பிரிவுகளில் பக்குவப்பட முடியும் 

 முடிந்த வரை 
தினம் தினம் நினைவுகளால் 
பிறந்து கொண்டே இருப்போம்
அப்பொழுதுதான் வாழ்க்கையை 
புதிதாய் ரசிக்க முடியம்..

*******************************************************************************
Free Backlinks