Tuesday, September 20, 2011

நீயே யூகித்துக்கொள்.....



நான் உனை பார்க்கும் பொழுதெல்லாம் 
மனதில் பதிகிறாய்-மருதாணி போல் 
வாடாமல் மலர்கிறாய்-காகிதப்பூ போல் 
வகை வகையாய்
வாசம் வீசுகிறாய்-வாகை போல்
சிரித்து சிரித்து சிவக்கிறாய் 
செவ்வானம் போல்-இருந்தும் 
பூமியில் தான் வாழ்கிறாய் 
கூட எனக்குள்ளும் வாழ்கிறாய் 
மேற்சொன்னதை விட ஒரு படி மேலாய்
எதுவென நீயே யூகித்துக்கொள்.....  
*********************************************************************

No comments:

Post a Comment

Free Backlinks