Saturday, September 10, 2011

தேவதை பிடித்தமும் பிடித்தல் நிமிர்த்தமும்(திணை: நேசம் )


நீ 
முகத்தையெல்லாம் மூடிக்கொண்டு 
கண்களால் மட்டும் சிரிப்பாயே 
அப்போது முகமூடி தேவதை 


மதிய நேரத்தில் 
தூக்ககலக்கத்தில் இங்கும் 
அங்குமாய் நடப்பாயே 
அப்போது தூங்குமூஞ்சி தேவதை 


எவரேனும் உனை குட்டை 
என்று சொல்லிவிட்டால் எக்கி 
எக்கி நெட்டை என்று சொல்வாயே 
அப்போது சின்ன தேவதை 

எதுவாயினும் சிரித்துகொண்டே இருப்பாயே 
அந்த செல்ல தேவதை மட்டுமே 
எனக்கு அதிகம் பிடிக்கும் 

எல்லோருக்கும் பேய் பிடிக்கும் 
எனக்கும் தேவதை பிடித்து விட்டதுபோல் 
தேவதை பிடித்து விட்டதோ-இல்லை 
தேவதையை எனக்கு பிடித்துவிட்டதோ 
தெரியவில்லை-நான் என்னையே அறியாமல் 

உனக்குள்ளே கரைந்து கொண்டிருக்கிறேன் போலும் 
தேவதை பிடித்தமும் பிடித்தல் நிமிர்த்தமும்
*********************************************************

2 comments:

  1. hey really nice yar... nice thinkin. :q who s your devathai... n d gal bhind al ur poems..

    ReplyDelete
  2. hmm even i am searching..i think she is near to me :a

    ReplyDelete

Free Backlinks