Tuesday, April 20, 2010

கடைசி நொடி சுவாசம்


கடலென பெய்யும் மழை
காற்று சுழன்றடிக்க
கதிரவன் ஒழிந்தும்
வெளிவந்தும் விளையாட,
எல்லோரும்-ஓர்
ஒலைக்குடிசையில்
தஞ்சம் புகுந்தோம்
பாவம் அப்போது
எங்களுக்கு
நேரெதிர் திசையில்
அலைந்து ஒளிந்து
மடிந்து -இனிமேல்
முடியாது போவென
உதிர்ந்தே போனாள்
அந்த ஒற்றை
ரோஜா இலை
அப்போது உணர்ந்தேன்
கடைசி நொடி சுவாசம்
எப்படி இருக்குமென்று.....
....

No comments:

Post a Comment

Free Backlinks