Monday, April 19, 2010

உனது ஓவியத்தை நான் பார்க்கையில்



நான் முக்கியமான
அலுவலக வேலைகளை 
பார்த்துக்கொண்டிருப்பேன் 
எங்கோ இருந்து ஓடி வருவாய் 
வந்தென்னிடம் -நான் 
போட்ட  கோலத்தை பாருங்கள்
என்று விடா பிடியாய் 
அழைத்துக்கொண்டு செல்வாய் 
நீ விடுத்தாலும் நான் 
விடைபெற மாட்டேன் அது வேறு 
நான் ஆர்வமாய் பார்ப்பேன் 
ஒரு புள்ளிமட்டுமே வைத்திருப்பாய் 
பிறகுனைப் பார்க்கையில் 
நீ வெட்கிச் சிவப்பாய் 
நானோ சிரித்தே சிவப்பேன்!... 
**********************************************************************

1 comment:

Free Backlinks