Friday, April 29, 2011

உனக்காய்-இதை தவிற




நீ 

சொன்ன படி 
உன்னை நினைக்க மறுத்தால் 
என் இதயம் துடிக்க மறுக்கிறது
ஏன் என்று கேட்டால் இதயம் சொல்கிறது 
உன் சுவாசக்காற்றில் தலை சாய்கிறேன்
உன் சுவாசக்கூட்டில் இளைப்பாருகிறேன்   
கொஞ்சம் கொஞ்சம் நம் காதல் வெட்கம் கொள்ள 
விடைபெற மறுத்து மனமின்றி விடை பெற்றோம் 
நேற்றைய கனவில்...பிறகு இன்றெப்படி உனை மறக்க
நீ சொல்லி  எதையுமே மறுத்ததில்லை என் இதயம் 
உனக்காய்-இதை தவிற 
இன்று மட்டும் எனக்காய் துடிக்கிறது என் இதயம் 
அதுவும் உன் நினைவுகளுக்காய்... 
*************************************************************

Thursday, April 7, 2011

ஒரு மலர் இரு வாசம்!



பட்டாம்பூச்சி,
பழப்பூச்சி என 
இரண்டையுமே 
உனக்குள் வைத்திருக்கிறாய் 
ஓ! எப்படி என கேட்கிறாயா
உன் பார்வையில் வண்ணம் சேர்கிறாய் 
புன்னகையில் வாசம் வீசுகிறாய்
ஒரு மலர் இரு வாசம்!...
*********************************************

Saturday, March 12, 2011

பொது உடைமை- சுயநலம்

கொட்டுகிறது மழை 
நிரம்பிவழிகிறது 
ஏழை வீட்டு குடம் 
பொது உடைமை 

கொட்டுகிறது மழை 
நிரம்பிவழிகிறது 
ஏழை வீட்டு குடம் 
சிதலமடைந்த வீடு
சுயநலம் 

பொது உடைமை-சுயநலம்
இரண்டிற்கும் ஒருநூல் அளவுதான்.. 

ஓர் விழா நாளில்

                                                                                         
ஓர் விழா நாளில் 
                                                                வண்ண வண்ண 

ஊர்திகள் வலம் போக 
இங்கும் அங்குமாய் 
ஓடிகொண்டிருந்தது 
ஓர் ஒற்றை ரோஜா 
இடை இடையே 
வந்து வழி மறைக்கிறாள் 
இதயம் பறிகிறாள் 
பின்தொடர்கிறேன்; பறிகொடுத்தேன் 
மெல்ல மெல்ல உன் நினைவுகள் 
என்னை ஆட்கொள்கிறது 
ரணப்பட்டுபோகிறேன்-நீ 
கிடைக்கவில்லை என்பதற்காக அல்ல 
உன் அன்பு என் காதலுக்கு
கிடைக்கவில்லை என்பதற்காக.....
***************************************************************
(இது நான் உணர்ந்த ஓர் உணர்வு )

Thursday, March 10, 2011

உன் பெயரில் உயிர்



எல்லா பெயரிலும் 
உயிர்-மெய் எழுத்து 
சேர்ந்தே இருக்கும்-ஆனால் 
உன் பெயரில் உயிரெழுத்து
 மட்டும் இருக்கிறதோ-ஆம் 
உன் பெயரை சொல்லிக்கொண்டே 
என் காதல் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது
*******************************************************************************
Free Backlinks