Friday, May 6, 2011

பயணம்-உங்களோடு......



மிக அருகில் சாரல் மழை 

சாலையெல்லாம் உன் முகம் 
**************

ஒவ்வொரு நாள் இரவும் 

ஓர் நிலா உதயமாகிறது 
ஓர் நிலா மறைகிறது 
நீ வீடுநோக்கி போகிறாய்
***************** 

வெகு தொலைவில் பறக்கிறது
ஒரு பறவை-அதன் 
குரல் மட்டும் என் மனதில் 
உன் காதல்
******************** 

எல்லா பூக்களும் 
மணத்தை கொடுத்து 
மனதை கொள்ளையடிக்கிறது 
ஒரு பூ மட்டும் மனதை கொடுத்து 
மனதை கொள்ளையடிக்கிறது -நீ
********************* 

எத்தனை முறை அழைத்தாலும் 
உன் பெயர் மட்டும் வாடாமல் 
மனம் வீசிக்கொண்டே இருக்கிறது 
பூவரசி.
***********************************************************


புத்தன் தேசம் 
கால் வைக்க பயம் 
தியானத்தில் கன்னி வெடிகள் 
***********************************************************

3 comments:

  1. தலை வணங்குகிறேன் உந்தன் தமிழுக்கு.....
    extremely superb..........

    ReplyDelete
  2. superb machan....................

    ReplyDelete

Free Backlinks