Wednesday, July 14, 2010

போகலாம்....




எதிர்பார்ப்புகள் என்று 
ஏதும் இல்லை 
விழிகளில் ஈரம் இன்னும் காயவில்லை 
வந்த வழியே போகின்றோம் 
நின்று ரசிக்க இனி நிஜங்கள் இல்லை 
நினைவுகளை தவிற 
வந்த வழியே போகின்றோம் 
கொள்ளை கொண்ட 
ஒரு சில நட்பு, 
இதயம்,
புன்னகை,
கண்ணீர்,
வெற்றிகள்,
விமர்சிப்புகள் 
என எல்லாம் சேர்ந்து செவ்வனே 
மெருகேற்றப்பட்ட சிற்பமாய்..
போகலாம்....
*********************************************************

No comments:

Post a Comment

Free Backlinks