Wednesday, June 30, 2010

கடைசியாய் ஒரு கடிதம்


உன்னை  நினைத்து 
பார்க்கும் ஒவ்வொரு பொருளிலும் 
நீயாகவே பிரதிபலிக்கிறாய் 
எல்லோரும் சொல்வார்களே 
தனக்கு  இன்னொரு பக்கம் இருக்கிறது 
ஆம் 
என் இன்னொரு பக்கத்தை 
கொஞ்சம் திருப்பிப்பார்த்தால் -அதில்
 நீயே அதிகம் இருக்கிறாய் 
எனக்கு மட்டும் இரு இதயம் 
உன் நினைவுகளையும் சேர்த்து 
பள்ளத்தாக்குகளில் இருந்து  
எழும் கதிரவன் போல் 
உன் நெற்றி சுருக்கங்களில் 
தினமும் உதயமாகும் வண்ணப்பொட்டு
உன் பெயரும் தான் 
எத்தனை மங்களகரமானது -ஆம் அத்துனை 
கீர்த்தனைகளையும் உள்ளடக்கயுள்ளதே -எல்லோருக்கும்
 மகிழ ஒரு நண்பன் 
மனக்குறை சொல்ல ஒரு தோழி 
உடன் பயணிக்க ஒரு காதல்  
எனக்கு மட்டும் எல்லாமுமாய் நீ 
ஆம் பெண்ணே 
அனைத்தையும் சொல்ல ஓர் 
ஆத்மார்த்தமான 
நிமிடங்களை தேடிக்கொண்டிருந்தேன் 
தேடல்களிலே தொலைந்துவிட்டேன் 
அதற்குள் வழி மாறி விட்டோம் 
தோழன் என்றே உன்னுடன் பழகி இறுக்க
 முடியும்-ஆனால் அந்த பொய்யை உன் 
பிறை முகத்திருக்கேதிரே சொல்ல
 மனம் இல்லை என்னுள்..
இப்போதும் கடைசியாய் நீ அணிந்திருந்த 
வண்ண உடைகள் என்னை வாழ்த்திக்கொண்டே
 செல்கிறது- என் பாதையில்
 உள்ள துன்பங்களை துடைத்தபடி 
நான் மீண்டும் வருவேன் பெண்ணே!.........
*********************************************************************************************************

3 comments:

  1. Awesome da mudiyala kannula thanni than varala

    ReplyDelete
  2. கவிதையும் உணர்வும் அருமை!

    ReplyDelete
  3. கடிதம் ம்ம்ம் அழகு

    என்ன வரிகள் தோழரே..

    என்னமோ பன்னிச்சி வாசிக்கும்போது...

    ReplyDelete

Free Backlinks