Friday, April 23, 2010

என் அம்மா


என்
மறதியோ மரணமோ
அவளிற்காய் நிகழ்ந்திடல் வேண்டும் 
ஆம்-எனக்கு எது பிடிக்கும் 
என்று பார்த்து பார்த்து சமைக்கிறாள்
எனக்கேதேனும் என்றால் துடித்துப் போகிறாள் 
எனக்கு தெரிய அவள் இது வரை 
எங்கேயும் போனதில்லை-ஒரே ஒரு முறை 
என் அப்பாவுடன் கோவிலிற்கு மட்டும் 
அதுவும் என் பிறந்தநாள் என்பதால் 
எல்லோரும் சொல்வார்கள்-தினமும் 
அதிஷ்டத்தின் முகத்தில் விழிக்கவேண்டுமென்று 
எனக்கு நினைவு தெரிய 
அன்பின் முகத்திலயே விழித்துக்கொண்டிருக்கிரேன் 
காலை தேநீருடன் என் அம்மா!...
*******************************************************************

No comments:

Post a Comment

Free Backlinks