Tuesday, September 15, 2009

கனவுகள்

கனவுகள்
மீசை
அரும்புவதற்குள்
வறுமை
மூழ்கடித்துவிட்டது,
மீண்டும்
எழுவதற்குள்
முதுமை
மலர்ந்துவிட்டது!.....

Saturday, September 12, 2009

வாழும் அழகு


வாழும் அழகு
கோடி நட்சத்திரங்கள்
சேர்ந்து அலங்கரித்த
வான் மேகம்,
ஏழு வண்ணங்கள்
சங்கமித்து செம்மைபடுத்திய
வானவில்,
பஞ்சபூதங்கள்
ஒன்றிணைந்த பூமி,
முத்தமிழ்
பிணைந்த செந்தமிழ்,
இவைகளை விட
அழகு!
அதில் வாழும் நீ!!!....
***************************************

மல்லிகை


மல்லிகை
கார்மேக கூந்தலுக்குள்
தொலைக்கிறாள்,
தன்னுடைய
மெளனத்தை!!!.................
******************************

தனிமை


தனிமை
உறங்கிய
பூமிப்பந்தில்
ஓய்வில்லாமல்
பொழிந்து
கொண்டிருந்தது
பனித்துளி!..
********************************

Thursday, September 10, 2009

தொலைந்தே நான் போகிறேன்


தொலைந்தே நான் போகிறேன்

நீ,
ஓவ்வொரு முறையும்
போ போ -என்று
சொல்லும் போதெல்லாம்
தொலைந்தேதான் போகிறேன்
என்னையே நான்
தேடமுடியாத தொலைவுகளுக்கு!....
**********************************************
Free Backlinks