Monday, November 13, 2017


வான் மழையில் 
நனையாமலிருக்க 
குடை விரித்தேன் 
புன்னகைத்தாய் நீ!
நனைந்தேன்  நான் 
குடைக்குள்ளேயே!...
                                        -- ரஞ்சித் 

Saturday, November 11, 2017


நான் 
உனை 
பார்பதை அறிந்ததும் 
உன் கன்னக்குழிகள் 
பிரசவிக்கின்றன 
என் மீதான வெட்கத்தை!...
                                                                       -- ரஞ்சித் 

உன்னை 
என் அம்மாவிடம் 
அறிமுகம் செய்ய 
அழைத்துப்போகையில் 
நீ சிந்திய 
வெட்கச்சாரல்களெல்லாம் 
இன்று நம் திருமணத்தில் 
பூக்களாய் அலங்கரிக்கின்றன!..
                                                                                    --ரஞ்சித் 

Sunday, September 10, 2017


நீ
எனைவிட்டு
விலகிச்
செல்லும்போதெல்லாம்
தொலைதூரக்கல்வியில்
காதலை கற்றுத்தருகிறாய்!...
                                                                --- ரஞ்சித் 

Friday, September 8, 2017


என்
வண்ணத்துப்பூச்சி
நீ!
இல்லா நேரம்
போகும் பாதையெங்கும்
உன் எண்ணங்களை
பரப்பிச்செல்லும்
எண்ணத்துப்பூச்சி
ஆகிறேன் நான்!...
                                    ---ரஞ்சித்             

Thursday, September 7, 2017



என் தோல்வியின்
தருணங்களில் - நீ
என்னை அரவணைக்கையில்
சிறகு குவித்து
துயில்கொள்ளும்
பறவையாகிறேன் நான்!..
                                                   --- ரஞ்சித் 

Friday, September 1, 2017



வண்ணத்துப்பூச்சிகளின்
வாள்சண்டைக்கு
ஆட்பட்டு போகிறேன்
ஒவ்வொருமுறையும்
உன்னுடன்
பூங்காவிற்கு செல்லும்போதும்
தங்களை விட ஓர்
அழகியை
அழைத்து வந்தேனென்று!..
                                                       --- ரஞ்சித் 

Thursday, August 31, 2017

முத்துக்குளிக்கிறேன்


பாவை நீ!
நொடிக்கு இருமுறை 
கண்சிமிட்டுகையில் 
மூச்சடக்காமலே 
முத்துக்குளிக்கிறேன் நான்..
                                                     --- ரஞ்சித் 


பிறையில்லா வானம்
அமைதியாய் -ஆயினும்
நீயில்லா நினைவ(லி)லைகளை 
உரக்கச்சொல்கிறது!..
                                         -- ரஞ்சித் 
                          

Thursday, August 3, 2017

மனம் தொட்ட கவிதை


என்
நன்பனுடனான உரையாடலின்
நடுவே என்னிடம் கேட்டான்
உன் வாசிப்பில்
புதிராயிருந்தும்
அதிகம் ரசிக்கவைத்த
ஆச்சரியப்படுத்திய
கவிதை எதுவென்று கேட்டான்
நான் சற்றும் யோசிக்காமல்
உன் பெயிரை சொல்லிவிட்டேன்
ஆம்,
நான் அதிகம் ரசித்து
அதிசியக்கும் கவிதை நீ மட்டுமே!...

Tuesday, August 1, 2017

நெடுவாசல் என்கிற எங்கள் கதிராமங்கலம்


நேற்று 
எங்கள் பூமிமேல்
வழிந்தோடிய 
காவிரியையும் 
விளைந்தாடிய 
பொன்னியையும்
காப்பாற்ற தவறிய 
புண்ணியவான்கள் 
இன்று,
எம் பூமிக்கடியிலிருக்கும் 
கார்பனுக்கும் 
கனிமத்திற்காகவும்
சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்
கேட்டால் பொதுவுடைமையாம்!
இந்நிலை நீடித்தால்-நாளை
இவர்களுக்கான வாய்க்கரிசியும்
வான்வழி இறக்குமதி செய்யவேண்டும்
என்பதை என்றுணர்வார்களோ?..
சற்றே சிந்திப்போம்!...

Monday, July 24, 2017

மழை


மேகத்தாயின்
கருவலியில்
உயிர் பெறுகிறது
பூமி!...

Thursday, July 20, 2017

இழப்புகள்





இப்போதும்
உன்னுடன்
உரையாடிய
மின்னஞ்சல்களை திறக்கையில்
என்னையும் என் நலன்களையும்
பற்றிச் சிந்தித்த - ஓர் இதயத்தின்
துடிப்புகளை உணரமுடிகிறது
கூடவே,
எப்போதாவது உனை மீண்டும்
பார்த்துவிடமாட்டோமா என்கிற
ஏக்க அலைகளும் அதிகமாகிவிடுகிறது
சிலரது அன்பும் அதன் தொடர்ச்சியான
இழப்புகளும்
எவ்வெனும் ஈடுசெய்ய முடியாதவையே!..
Free Backlinks